சென்னை, செப்.10 அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இதர பிற் படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கத்தின் 19ஆம் ஆண்டு விழா 6.9.2026 அன்று சென்னையில் நடைபெற்றது.
விழா தொடக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக – சமூகநீதி கிடைப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய பிரிவுகளை உருவாக்கிட – மக்கள் திரள் போராட்டத்தின் மூலம் வழிமுறை கண்ட தந்தை பெரியாரின் ஒளிப்படத்தினை திறந்து அனைவரும் மரியாதை செலுத்தினர்.
ஊழியர் நல சங்கத்தின் ஆண்டு விழாவினை யொட்டி பெண்களின் மேம்பாடு மற்றும் சமூகநீதி – இடஒதுக்கீடு குறித்த கருத் தரங்கம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ. இராஜசேகர் கருத்தரங்கு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து தலைமை வகித்தார். சங்கத்தின் செயல் தலைவர் ரவீனா விஜயகுமார் வருகை தந்தோரை வரவேற்றுப் பேசினார்.
திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று சமூகநீதி – இடஒதுக்கீடு நடைமுறைபற்றி சிறப்புரை ஆற்றினர். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அவசியத்தையும் கணக்கெடுப்பு நடத்தப்படும் விதம் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனர். பிற்படுத்தப் பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு ஜாதி என்ற குறிப்பில் ஏற்கெனவே உள்ள ஒன்றிய, மாநில அரசுப் பட்டியல்களில் உள்ள பெயரிலேயே பதிவிடப்பட்ட வேண்டும் என்பதுடன் சமூக நீதியின் ஆக்கத்திற்கு உதவிடும் வகையில் இருக்கும் என விரிவாகப் பேசினர்.

சமூக செயல்பாட்டாளரும் வழக் குரைஞருமான பவதாரணி, சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து சிறப்புரையினை வழங்கினார்.
அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நல சங்கங்களின் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலத் திட்டங்கள் குறித்தும், அவைகளை முழுமையாக நடை முறைப்படுத்தி பயன் பெறும் வழிமுறைகள் குறித்தும் விரிவாகப் பேசினர். ஊழியர் நலச் சங்கத்தின் ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தும், வருங்காலத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் பரவலாகத் தெரிகின்ற வகையில் உறுப்பினர் சேர்க்கையில் அக் கறை காட்டி நடை பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுப் பேசினார்.
விழாவின் நிறைவாக நலச் சங்கத் தின் பொருளாளர் பி.டி. ஆனந்த் நன்றி கூறினார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிற்படுத் தப்பட்ட ஊழியர் நலச் சங்கத்தின் புதிய தலைவராக சேதுராமன் தேர்ந் தெடுக்கப்பட்டார்.
ஆண்டு விழாவில் பல மாநிலப் பிரதிநிதி உறுப்பினர்கள், பிற நிறுவன பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் சமூகநீதியில் நாட்டம் கொண்ட பிரமுகர்கள் பலரும் பங்கேற்றுச் சிறப் பித்தனர்.
.png)
13 hours ago
1





English (US) ·