டெக்சஸ், டல்லாசில் வியாழக்கிழமை (செப்டம்பர் 9) நடைபெற்ற குடியரசுக்கட்சியின் இடைத்தேர்தல் மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப். - படம்: இபிஏ
The Iran war will come to an end only after the November election.
President Trump stated the US-Iran war will end only after the November midterm elections, accusing Iran of prolonging it to weaken the US government. He expects oil prices to then decrease significantly. The conflict has intensified, with crude oil reaching $100/barrel. US forces attacked Iran-linked tankers, while Iran retaliated against US warships and tankers. Houthi rebels also attacked Saudi refineries. This 7-month war has raised energy prices, reducing Trump's public support. Republicans, fearing losing Congress on November 3, pressure him to end the war. Trump mentioned possible talks, but none are planned.
Generated by AI
வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் முடிவடைந்த பின்னரே ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதுவரை கச்சா எண்ணெய் விலை குறையாது என்ற அவர் தேர்தலை அடுத்து அமெரிக்காவில் பலவீனமான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே ஈரான் போரை நீட்டித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
எனினும், தேர்தலுக்குப்பின் ஈரான் போரைத் தொடரமுடியாது என்பதால் உடனடியாகப் போர் முடிவுக்கு வந்து, எண்ணெய் விலையும் கணிசமாகக் குறையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
டெக்சசில் நடைபெற்ற குடியரசுக்கட்சியின் இடைத்தேர்தல் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை (செப்டம்பர் 8) அவர் பேசினார்.
அமெரிக்கா, ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த வாரம் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலராக உயர்ந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான 60 நாள் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஈரான் தொடர்புடைய எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள், எண்ணெய்க் கப்பல்கள்மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமனின் ஹூதி அமைப்பினரும் சவூதி அரேபியாவின் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்கள்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சரியும் மக்கள் ஆதரவு
கடந்த ஏழு மாதங்களாக நீடிக்கும் இப்போரினால் எரிசக்தி, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் அதிபர் டிரம்ப்பிற்கு மக்கள் ஆதரவு குறைந்துள்ளது. நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை இழக்கும் ஆபத்தில் குடியரசுக்கட்சி உள்ளதால், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு டிரம்ப்பிற்குக் கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப், தற்போதைக்கு அத்தகைய திட்டம் எதுவுமில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
எரிபொருள் விலை உயர்வால் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் மேலும் உயரக்கூடும் எனப் பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
.png)







English (US) ·