பிரதீப் ராஜ் படுகொலை: "முதலில் கொலைகள்... பின்னர் ஹீரோ சாகசமா?"- முதல்வர் விஜய்யைத் தாக்கும் கனிமொழி

16 hours ago 1

பிரதீப் ராஜ் படுகொலை சம்வத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Published:Just NowUpdated:Just Now

எம்.பி கனிமொழி

எம்.பி கனிமொழி

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து மிரட்டியதாகப் புகார் தெரிவித்த மறுநாளே பிரதீப் ராஜ் (28) என்பவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

காவல் ஆய்வாளர் கந்துவட்டி ரவுடிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தன் மீது பொய் வழக்கு போடுவதாக பிரதீப் குற்றம்சாட்டி இருந்த நிலையில் இந்தச் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

இந்தப் படுகொலை சம்வத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை. இப்படி நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் ஒரு சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், தான் ஒரு முன்னாள் கதாநாயகன் என்பதால், வணிகத் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல, முதலில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா என்ற குழப்பமும் மக்களிடையே எழுகிறது" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Read Entire Article